×

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் காயம் அடைந்தனர். சொக்கநாதபட்டியில் தெரு நாய் விரட்டி கடித்ததில் காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெரு நாய் விரட்டி விரட்டி கடித்ததில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 12 பேரில் 8 பேர் சொக்கநாதபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Pudukottai district ,Pudukottai ,Ponnamaravathi ,Chokkanathapatti ,
× RELATED பொன்னமராவதி பகுதியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்